Connect with us

Raj News Tamil

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு..!

இந்தியா

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு..!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், விழாவை முன்னிட்டு, அயோத்தி நுழைவு வாயில், ராமர் கோவில் மற்றும் கோவிலை சுற்றி இருக்கும் பல முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விழாவையொட்டி சைபர் கிரைம் குற்றவாளிகள், ராமர் கோவில் என்ற பெயரில் போலி இணையதளத்தையும் உருவாக்கி விஐபி அனுமதிச் சீட்டு மற்றும் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்குவதாக பணமோசடி செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அயோத்தி போலீசார் தெரிவித்துள்ளனர்.

More in இந்தியா

To Top