Connect with us

Raj News Tamil

இந்திய ரசிகர்களை பார்த்து அச்சம்: ஆஸி. கேப்டன் ஓபன் டாக்!

விளையாட்டு

இந்திய ரசிகர்களை பார்த்து அச்சம்: ஆஸி. கேப்டன் ஓபன் டாக்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளப்போவது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அற்புதமாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு பின்னே ரசிகர்கள் இருப்பார்கள்.

தற்சமயத்தில் அவர்கள் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். கடந்த போட்டியில் ஸ்டார்க் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கும் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கும் இடையேயான இருக்கும் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் எங்களுடைய வெற்றிக்கு முக்கியமாகும். இந்தியா இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக அவர்களுடைய பவுலர்கள் மிகவும் கூர்மையாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இத்தொடரில் சிறந்த அணியாக செயல்பட்டு வரும் அவர்களுக்கு எதிராக ஃபைனலில் விளையாடுவோம் என்று நினைக்கவில்லை. மேலும் ஃபைனல் நடைபெறும் மைதானத்தில் ரசிகர்கள் ஒரு தலைபட்சமாக இருப்பார்கள். அவர்களை அமைதியாக இருக்க வைப்பது எங்களுக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கும்” என்று கூறினார்.

More in விளையாட்டு

To Top