Connect with us

Raj News Tamil

ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்! – வசமாக சிக்கிய ஓட்டுநர்!

இந்தியா

ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்! – வசமாக சிக்கிய ஓட்டுநர்!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸை போலீஸார் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது 364 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கைது செய்தனர்.

விசாரணையில் இதன் மதிப்பு ரூ.30 லட்சம் என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி பல்வேறு இடங்களுக்கு விநியோகித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்திய இந்த சம்பவம் அனைத்து தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top