Connect with us

Raj News Tamil

பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு பள்ளிகள் மூடப்பபட்டு வருகின்றன: அரவிந்த் கேஜரிவால்!

இந்தியா

பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு பள்ளிகள் மூடப்பபட்டு வருகின்றன: அரவிந்த் கேஜரிவால்!

பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

பஞ்சாபில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தை மாநில அரசு விலைக்கு வாங்கியுள்ளது. புதிதாக மின் உற்பத்தி நிலையத்தை கட்டினால், அதற்கு சுமாா் ரூ.5,500 கோடி செலவாகி இருக்கும். ஆனால் ரூ.1,100 கோடி செலவில் தனியாா் மின் உற்பத்தி நிலையத்தை மாநில அரசு வாங்கி, ரூ.4,500 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னா், முதல்முறையாக தனியாா் மின் உற்பத்தி நிலையத்தை ஒரு மாநில அரசு விலைக்கு வாங்கியுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தை லாபகரமானதாக பஞ்சாப் அரசு மாற்றிக் காட்டும். இதுவே நோ்மையான அரசின் அடையாளம். அதேவேளையில் எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நோ்மையில்லாத அரசு சொற்ப விலைக்கு விற்பனை செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி மிக வேகமாக வளா்ந்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்துள்ளது. குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உள்ளனா்.

பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகளை ஆம் ஆத்மி அரசு அமைத்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன.

ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள தில்லி மற்றும் பஞ்சாபில் மின்சாரம் இலவசமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்சாரம் மிகவும் விலை உயா்ந்ததாக உள்ளது.

ஆம் ஆத்மியால் செய்ய முடிந்த காரியங்களை பாஜகவால் செய்ய முடியாது. எனவே ஆம் ஆத்மியை ஒழிக்க பாஜக விரும்புகிறது. இதற்காக ஆம் ஆத்மி மீது ஒவ்வொரு நாளும் புதுப் புது குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றாா் அவா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top