இந்தியா
அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு…இதான் விஷயமா!!
அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசு தனது மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்திற்கு பதிலாக 35 சதவீதம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரே வாரத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பல வாக்குறுதிகளை நிறைவேற்றி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைப் பரிசாக வழங்கியுள்ளது.
You must be logged in to post a comment Login