Connect with us

Raj News Tamil

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை அறிக்கை : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை அறிக்கை : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும் நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top