Connect with us

Raj News Tamil

இந்திய கம்யூ. அலுவலகம் தாக்குதல்; யாருக்குமே பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகம்

இந்திய கம்யூ. அலுவலகம் தாக்குதல்; யாருக்குமே பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல், யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்த திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top