Connect with us

ட்ரிப்ஸ் மருந்துக்கு பதிலாக நோயாளிகளிக்கு தண்ணீரை ஏற்றிய நா்ஸ்..! உயிரிழந்த 10 நோயாளிகள்..!

உலகம்

ட்ரிப்ஸ் மருந்துக்கு பதிலாக நோயாளிகளிக்கு தண்ணீரை ஏற்றிய நா்ஸ்..! உயிரிழந்த 10 நோயாளிகள்..!

அமெரிக்காவின் மெட்ஃபோர்டில் உள்ள அசாண்டே ரோக் பிராந்திய மருத்துவமனையில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மருத்துவமனையில் மருந்துகளை ஊழியர்கள் சிலர் திருடியதாக வெளியான புகாரை போலீஸார் விசாரித்தபோது, ஒரு வருடத்துக்கு முன்பாக அரங்கேறிய கோரச் சம்பவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மருத்துவமனையின் சேகரிப்பில் இருந்த விலையுயர்ந்த மருந்துகள் சிலவற்றை அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவர் தொடர்ந்து திருடியுள்ளார். பின்னர் கணக்கு காண்பிப்பதற்காக அவற்றை நோயாளிகளுக்கு வழங்கியதாக பொய் தகவலை பதிவு செய்திருக்கிறார். ஐவி ட்ரிப்ஸ் எனப்படும் ரத்தக்குழாய்க்கு நேரடியாக செலுத்தப்படும் மருந்துகளை திருடிவிட்டு அவற்றை நிர்வாகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்காக, குழாய் நீரை பயன்படுத்தி இருக்கிறார். அவ்வாறு குழாய் நீர் செலுத்தப்பட்டதில் நோய்த்தொற்று ஏற்பட்டு சுமார் 10 நோயாளிகள் இறந்துபோனது பின்னர் தெரிய வந்துள்ளது.

மெட்போா்ட் போலீசாா் மேற்கொள்ளும் விசாரணையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமிருக்கும் எனத் தெரிய வருவதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் கூடலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான விசாரணையில், மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நர்ஸ் ஒருவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top