Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

விளையாட்டு

ஐபிஎல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

சென்னையில் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி – கே.கே. ஆர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது.

முதலில் களமிறங்கிய பாப் டு பிளெஸ்ஸிஸ் 8 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த கிரீன் அதிரடியாக 21 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் விராட் கோலி ருத்ர தாண்டவம் ஆட, மேக்ஸ்வெல் அவருக்கு உறுதுணையாக ரன்களை சேர்த்தார்.

மேக்ஸ்வெல் 28 (19) ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து பட்டித்தார் (3), அனுஜ் ராவத் (3) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி அரைசதம் கடந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 8 பந்தில் 20 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 182 ரன்கள் எடுத்தது. ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஜோடி நரைன், சால்ட் 39 பந்துகளில் 86 ரன்கள் குவித்தது.

நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசினார். சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி வெற்றிப்பாதைக்கு அணியை அழைத்துச் சென்றது. சிக்ஸர்களை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், 30 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் கொல்கத்தா அணி 16.5 ஓவரிலேயே 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 39 (24) ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top