Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: குஜராத் அணியை வென்றது பஞ்சாப் அணி!

விளையாட்டு

ஐபிஎல்: குஜராத் அணியை வென்றது பஞ்சாப் அணி!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 17-வது போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. க

குஜராத் தரப்பில் கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top