Connect with us

Raj News Tamil

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர் – ரஜினி பாராட்டு

சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர் – ரஜினி பாராட்டு

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியலும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பாராட்டி, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், ஒரு குறிஞ்சி மலர் என்றும், கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு என்றும் கூறியுள்ளார்.

மேலும், படத்தை பார்க்கும் மக்களை, கார்த்திக் சுப்புராஜ் கைதட்ட வைக்கிறார், பிரம்மிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார் என்று தனது பாராட்டுக்களை ரஜினி கூறியுள்ளார்.

More in சினிமா

To Top