Connect with us

Raj News Tamil

பேருந்தை முந்த முடியாததால் ஆத்திரம்….பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு..!!

இந்தியா

பேருந்தை முந்த முடியாததால் ஆத்திரம்….பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் தொட்டபெலவங்களா நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது இந்த பேருந்தின் பின்னால் ஆட்டோவில் வந்த ஆட்டோ ஓட்டுனர் உட்பட நான்கு பேர் பேருந்தை முந்த முயன்றுள்ளனர். அவர்களால் அது முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் ஆட்டோவில் வந்த இவர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பிறகு பேருந்து ஓட்டுநர் பிரசன்னாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிரசன்னா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தொட்டபெலவங்களா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கலிபிலிகோட் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜூ, ஹனுமந்தராஜூ, நரசிம்மராஜு ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

More in இந்தியா

To Top