இந்தியா
கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனை தலைவர் மீது துப்பாக்கி சூடு..!
கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனை தலைவர் மற்றும் அவரது வாகன ஓட்டுனர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது ஓட்டுனர் இருவரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மர்ம நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் ரவியின் முக பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது வாகன ஓட்டுனரும் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளார்
இதையடுத்து அவர்கள் இருவரும் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய நபர்களை பெலகாவி கிராமப்புற போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login