Connect with us

Raj News Tamil

காணாமல் போன மனைவி.. வீட்டிற்கு பின்புறம் காத்திருந்த அதிர்ச்சி.. ஒன்றரை வருடம் கழித்து சிக்கிய கணவன்..

இந்தியா

காணாமல் போன மனைவி.. வீட்டிற்கு பின்புறம் காத்திருந்த அதிர்ச்சி.. ஒன்றரை வருடம் கழித்து சிக்கிய கணவன்..

கேரளாவின் எர்னாகுளத்தில் உள்ள ஞாறக்கல் பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவரது மனைவி ரம்யா, கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. 6 மாதங்களாக மனைவியை தேடிவிட்டு, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஞாறக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், ரம்யாவை தேடி வந்தனர். இதற்கிடையே, தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார் என்று உறவினர்களிடம் கூறிய சஜீவ், 2-வது திருமணத்திற்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினருக்கு சஜீவ்வின் மீது சந்தேகம் ஏற்பட, அவரது நடவடிக்கையை சில மாதங்களாக கவனித்துள்ளனர்.

அதில், அவரது நடவடிக்கையை உற்று கவனித்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, சம்பவத்தன்று, ரம்யாவுக்கும், சஜீவுக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியை அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை வீட்டின் வளாகத்தில் புதைத்துள்ளார். இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த காவல்துறையினர், 18 மாதங்களுக்கு பிறகு, அவரை கைது செய்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top