Connect with us

Raj News Tamil

மதுரை-நகைக்கடை தீ விபத்து; ஒருவர் பலி!

தமிழகம்

மதுரை-நகைக்கடை தீ விபத்து; ஒருவர் பலி!

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, மருமகன் மோதிலால் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் நகைக்கடையின் முதல் தளத்தில் தீ பரவியதை கண்ட மோதிலால் தீயை அணைப்பதற்காக முதல் தளத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் தீ வேகமாக பரவியதால் அவரால் கீழ்தளத்திற்கு திரும்பமுடியவில்லை. இதனிடையே கீழ் தளத்தில் இருந்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டும் கடையில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மயங்கிய நிலையில் இருந்த மோதிலாலை கண்ட மீட்புக்குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

More in தமிழகம்

To Top