Trending
தலையில் பலகை.. இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டிய இளைஞர்.. ஆச்சரியத்துடன் பார்த்த நெட்டிசன்கள்..
கொல்கத்தாவின் பரபரப்பான சாலைகளில், இளைஞர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தார். ஆனால், ஸ்டியரிங்கை தனது கைகளால் பிடிக்காமல் வண்டியை ஓட்டி வந்தார்.
இதுமட்டுமா அவர் செய்தார்.. தலையில் சில பலகைகளை அடுக்கி வைத்துக் கொண்டு, நேக்காக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். இதனை பார்த்த சக வாகன ஓட்டி ஒருவர், வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை, IPS அதிகாரியான ஆரிப் ஷேக், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு தலைப்பிட்டுள்ள அவர், வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற நிலையிலும், இந்த அளவிற்கான தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பலரது மனங்களையும் கவர்ந்த இந்த வீடியோ, லைக்ஸ்களை குவித்து வருகிறது.
You must be logged in to post a comment Login