Connect with us

Raj News Tamil

கடைசி வரை மாரிமுத்துவின் ஆசை நிறைவேறாமல் போயிடிச்சே? ரசிகர்கள் சோகம்!

சினிமா

கடைசி வரை மாரிமுத்துவின் ஆசை நிறைவேறாமல் போயிடிச்சே? ரசிகர்கள் சோகம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து.

இந்த சீரியலின் டப்பிங் பணியின்போது, மாரடைப்பு ஏற்பட்டு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இவரது ஆசை ஒன்று, கடைசி வரை நிறைவேறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு மாரிமுத்து பேட்டி அளித்திருந்தார்.

அதில், நான் பல வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். ஆனால், நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு.

அந்த கனவை நிறைவேற்றும் வகையில், மணப்பாக்கத்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளேன்.

அந்த வீட்டிற்கு மனைவியின் பெயரை தான் வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார். ஆனால், கடைசி வரை, அந்த வீட்டிற்கு அவர் குடிபெயரவே இல்லை என்று தகவல் கசிந்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top