Connect with us

Raj News Tamil

”அன்பில் மகேஸ் மீது அப்படி என்ன கோபம்” – தொண்டரை தலையிலேயே அடித்த அமைச்சர் KN நேரு!

தமிழகம்

”அன்பில் மகேஸ் மீது அப்படி என்ன கோபம்” – தொண்டரை தலையிலேயே அடித்த அமைச்சர் KN நேரு!

திமுகவின் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பை பெறுகிறதோ, அதே அளவுக்கு திமுகவின் அமைச்சர்கள் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

“பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி” என்று அமைச்சர் பொன்முடி பேசியது, கவுன்சிலர் தலையிலேயே அமைச்சர் கே.என்.நேரு அடித்தது, தொண்டர்கள் மீது அமைச்சர் ச.மு.நாசர் கற்களை வீசியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இவ்வாறு இருக்க, சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உதயநிதி ஸ்டாலினை காண்பதற்கு தொண்டர்கள் சிலர் வருகை தருகின்றனர். அப்போது, அருகில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, அங்கு வந்த தொண்டரை தலையிலேயே அடித்து, அங்கிருந்து அனுப்புகிறார்.

இந்த வீடியோவிற்கு கேப்ஷன் வழங்கியுள்ள சவுக்கு சங்கர், “அன்பில் மகேஷ் மேல இருக்க கோவத்தை தொண்டர்கள் மேல காட்டாதண்ணே என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படி என்றால், அன்பில் மகேஷிற்கும், கே.என்.நேருவிற்கும் இடையே ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top