தமிழகம்
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார்..!
நாகர்கோவிலை சேர்ந்த ஸ்டான்லிகுமார் என்பவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்து வருகிறார்.
இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் மத போதனை செய்கிறேன் என்ற பெயரில் அவர்களிடம் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கல்யாணி என்ற பெண் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்டான்லிகுமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த பாதிரியார் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login