Connect with us

ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி

இந்தியா

ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும் தனக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top