Connect with us

Raj News Tamil

பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10ம் தேதி தொடக்கம்!

விளையாட்டு

பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10ம் தேதி தொடக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தில்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் “நாட்டில் முதன்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுதில்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் 3 திடல்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

More in விளையாட்டு

To Top