தமிழகம்
ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும்! – சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 4,5 தேதிகளில் தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரியிலும், ஜனவரி 6ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 7ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியிலும், ஜனவரி 8 ஆம் தேதி திருவள்ளூரிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.