Connect with us

Raj News Tamil

இலங்கையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு! – தமிழர்கள் மகிழ்ச்சி!

உலகம்

இலங்கையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு! – தமிழர்கள் மகிழ்ச்சி!

ஜல்லிக்கட்டு ஆர்வலரான இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு களத்தில் அவரது காளைகளும் ஆண்டுதோறும் களமிறங்கும்.

இந்நிலையில் இவரது தலைமையில் சுற்றுலா துறை சார்பில் நாளை முதல் ஒரு வாரம் பொங்கல் விழா இலங்கையில் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பல்வேறு வெளிநாட்டவர்களும் திரிகோணமலை வந்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் அண்டை நாடான இலங்கையிலும் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top