Connect with us

Raj News Tamil

முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் ஆா்எஸ்எஸ்-பாஜக: ராகுல்!

இந்தியா

முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் ஆா்எஸ்எஸ்-பாஜக: ராகுல்!

லடாக்கின் லே பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, இளைஞா்களுடனான கலந்துரையாடினார்.

அவர் பேசியதாதவது:-

‘இந்தியாவில் சுதந்திரத்தின் அடித்தளம்தான் அரசியல் சாசனம். இது விதிகளை உள்ளடக்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை, திட்டக் குழு, பாதுகாப்புப் படைகள், பிற துறைகள் மூலமாக நாம் உருவாக்கிய அரசியல் சாசனமும் அதன் இலக்குகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் தங்களின் சொந்த நிர்வாகிகளை ஆா்எஸ்எஸ்-பாஜக அமைப்புகள் நியமனம் செய்து வருகின்றன. ஏதாவதொரு அமைச்சகத்துக்குச் சென்று முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன கேள்வி எழுப்பும்போது, அதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் நிர்வாகி இருப்பது தெரிய வரும்’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

More in இந்தியா

To Top