Connect with us

Raj News Tamil

காலை உணவு தாமதமானதால் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்..!!

இந்தியா

காலை உணவு தாமதமானதால் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நேத்ராவதி (40). இவரது 17 வயது மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.

இவர் தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் இரவு சாப்பிடாமல் தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பிய போது காலை உணவு தயாராகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தாயை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து மகன் தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறி கே.ஆர்.புரா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் பெற்ற தாயை மகனே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top