Connect with us

Raj News Tamil

பொங்கலுக்கு சென்னை – நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில்..!

தமிழகம்

பொங்கலுக்கு சென்னை – நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு வந்தே பாரத் ரயிலானது இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வண்டி எண் 06081 சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தேபாரத் ரயிலானது காலை 5 மணிக்கு 13 மற்றும் 14-ந் தேதிகளில் கிளம்பி நாகர்கோவிலுக்கு 1 மணி 45 நிமிடங்களுக்கு சென்றடையும்.

இதேபோல் வண்டி எண் 06082 நாகர்கோவிலில் இருந்து 2 மணி 25 நிமிடங்களுக்குச் செல்லும் ரயிலானது சென்னைக்கு 11 மணி 25 நிமிடங்களில் வந்தடையும். இது சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதே வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்தடையும். முன்பதிவு செய்து பயணிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top