Connect with us

Raj News Tamil

தமிழகத்தை நோக்கி நகரும் ‘மிக்ஜம்’ புயல்! – வானிலை ஆய்வு மையம்!

வானிலை

தமிழகத்தை நோக்கி நகரும் ‘மிக்ஜம்’ புயல்! – வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டிசம்பர் 3ம் தேதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது வட தமிழகம், ஆந்திரா இடையே டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in வானிலை

To Top