Connect with us

Raj News Tamil

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு !

இந்தியா

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு !

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், செங்கோட்டை உள்ளிட்டவை மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 காவலர்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 100 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top