Connect with us

Raj News Tamil

பொங்கலுக்கு தயாரான செங்கரும்பு: நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகம்

பொங்கலுக்கு தயாரான செங்கரும்பு: நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தைப்பொங்கலுக்கு தயாரான செங்கரும்புகள் நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதல் விலைக்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோர வயல்வெளி பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வருடந் தோறும் செங்கரும்பினை விவசாயம் செய்து வருகின்றனர்.

தைப்பொங்கலுக்காக பத்து மாதங்கள் வரை விளைவிக்கப்படும் இந்த செங்கரும்புகளை சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து கொள்முதல் செய்கின்றனர்.

மேலும் தமிழக அரசின் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பிற்காக செங்கரும்புகளை கூட்டுறவுதுறையினரும் அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடம் தைப்பொங்களுக்காக செங்கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மகசூல் பலன் கிடைத்து தயார் நிலையில் உள்ளது. இந்த வருடம் பெய்த பருவ மழையின் காரணமாக செங்கரும்புகளை விளைவிக்க கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களின் பணிகள் அதிகரித்து ஊதியச் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதல் விலைக்கு செங்கரும்புகளை அரசு மற்றும் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து விவசாயிகளை லாபம் அடைய செய்து. இனிவரும் காலங்களில் கரும்பு விவசாயத்தினை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top