இந்தியா
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த முதல்வர்..!
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை வருவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவந்துள்ளது.
பலமுறை தெலுங்கானா சென்ற பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் ஒரு முறை கூட நேரில் சென்று வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login