Connect with us

Raj News Tamil

4 ரூபாய்க்கு சரிந்த தக்காளியின் விலை: கோபத்தில் சாலையில் கொட்டிய விவசாயி!

இந்தியா

4 ரூபாய்க்கு சரிந்த தக்காளியின் விலை: கோபத்தில் சாலையில் கொட்டிய விவசாயி!

ஆந்திர மாநிலத்தில் தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு சரிந்ததால் விவசாயி ஒருவர் ஆத்திரமடைந்து சாலையில் தக்காளிகளை கொட்டி அழித்தார்.

கடந்த மாதம் தக்காளி விலை நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது. இதனால் பல விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கள் என்பதை பார்த்தோம்.

தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்ற போது ஒரு கிலோ தக்காளி நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கோபம் அடைந்த அவர், சாலையிலேயே தக்காளிகளை கொட்டி விட்டு சென்றுள்ளார். தக்காளிகள் சாலையில் கொட்டி கிடப்பதை மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

More in இந்தியா

To Top