Connect with us

Raj News Tamil

முத்தம் கொடுக்க வந்த கணவன்…நாக்கை கடித்து குதறிய மனைவி..!!

இந்தியா

முத்தம் கொடுக்க வந்த கணவன்…நாக்கை கடித்து குதறிய மனைவி..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக் (34). இவருக்கும், புஷ்பாவதி (30) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில், நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை கணவனின் சந்தேக புத்தியால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோபமாக இருந்த தனது மனைவி புஷ்பாவதியை சமாதானம் செய்ய சினிமா பாணியில் மனைவி புஷ்பாவதியின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த புஷ்பாவதி கணவனின் நாக்கை கடித்துள்ளார். இதனால் அவருடைய நாக்கு துண்டாகி தொங்கியது. வலி தாங்க முடியாமல் அலறிய தாராசந்த்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தனது மனைவியுடன் வாழவே தனக்கு பயமாக உள்ளதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

More in இந்தியா

To Top