Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பேருந்தை அடித்து நொறுக்கிய காட்டு யானை ! தெறித்தோடிய பயணிகள்!

உலகம்

பேருந்தை அடித்து நொறுக்கிய காட்டு யானை ! தெறித்தோடிய பயணிகள்!

ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் அர்த்தம் என்ற கிராமம் அருகே உள்ள சாலையில், ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அச்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை திடீரென ஒரு காட்டுயானை தடுத்து நிறுத்தியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது யானை, பேருந்தின் கண்ணாடிகளை தந்தத்தால் அடித்து உதைத்தது.

அப்போது பேருந்தின் ஓட்டுநர், சட்டென பேருந்தை பின்னோக்கி இயக்கியதாக தெரிகிறது. ஆனால், அந்த பேருந்தை யானை துரத்தியதும் அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய சில பயணிகள், சாலையில் ஓடினர். பின்னர் யானை அவர்களை தொடர்ந்தது . இதனால் அப்பகுதியில் பயணிகள், அலறியபடி தப்பியோடினர். இதன் பின் யானை அங்கிருந்து சென்றது. காட்டுயானை தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் . பேருந்தை தாக்கிய காட்டுயானையின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top