இந்தியா
தெலுங்கானாவில் விபரீதம்..! தனியாா் மருத்துவனையில் தீ விபத்து..!
தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் உள்ள அன்கூரா என்ற தனியார் மருத்துவமனையில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென கீழே உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓடித்தொடங்கினா்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை