இந்தியா
சென்னை – கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
காலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.