Connect with us

Raj News Tamil

துண்டு துண்டாக வெட்டப்பட்ட தாயின் சடலம்.. 22 வயது மகள் செய்த கொடூரம்..

இந்தியா

துண்டு துண்டாக வெட்டப்பட்ட தாயின் சடலம்.. 22 வயது மகள் செய்த கொடூரம்..

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் உள்ள லால்பாக் பகுதியை சேர்ந்தவர் வீனா ஜெயின். இவருக்கு ரிம்பிள் என்ற 22 வயது மகள் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில், ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, வீனா ஜெயின் காணாமல் போயுள்ளனர்.

எங்கு தேடியும் இவர் கிடைக்காததால், உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இறுதியில், வீனாவின் குடும்பத்தினர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரது வீட்டிலேயே சோதனை மேற்கொண்டனர்.

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, வீனாவின் வீட்டில் உள்ள பாத் ரூம் ஒன்றில், பிளாஸ்டிக் பைகளில், மனித உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. இதனை சோதனைக்கு அனுப்பிய பின், அந்த உடல்கள் வீனாவுடையது என்று தெரியவந்தது.

இதையடுத்து, வீனாவின் மகள் ரிம்பிளுடன் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தான் தனது தாயை கொலை செய்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். ஆனால், அவர் எதற்காக தனது தாயை கொலை செய்தார் என்பதை இன்னும் கூறவில்லை. அதற்கான காரணம் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top