Connect with us

Raj News Tamil

தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு!

இந்தியா

தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு கடந்த 34 நாட்களாக உள்ளார்.

இந்நிலையில் சந்திரபாபுவை அவரது மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராம்மனி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர். இதன் பிறகு புவனேஸ்வரி கூறும்போது, “எனது கணவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஆந்திர அரசு தவறிவிட்டது. அவரது எடை 5கிலோ குறைந்துள்ளது. எடைமேலும் குறைந்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று கவலை தெரிவித்தார்.

சந்திரபாபு மகனும், தெலுங்கு தேசம் பொதுச் செயலாளருமான லோகேஷ் கூறும்போது, ‘‘எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஊக்க மருந்து கொடுக்க ஜெகன் அரசுமுயற்சிக்கிறது. அவரது உடல்நிலை குறித்து அதிகாரிகளோ இந்த அரசோ முழுமையாக தகவல் தெரிவிப்பதில்லை. சிறையில் கொசு தொல்லை உள்ளது. குடிநீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாதது போன்றவற்றால் எனதுதந்தைக்கு ஒவ்வாவை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பும் போதுமானதான இல்லை. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு’’ என்றார்.

More in இந்தியா

To Top