Connect with us

Raj News Tamil

கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 12 பேர் கைது..!!

தமிழகம்

கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 12 பேர் கைது..!!

மதுரையில் கடந்த மே மாதம் நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆனந்தகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் மட்டும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

அவர்கள் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதை அறிந்த ஆனந்தகுமாரின் நண்பர்கள் எதிரணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கையெழுத்திட வரும்போது கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர்.

தகவல் அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

More in தமிழகம்

To Top