Connect with us

Raj News Tamil

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து 14 பேர் பலி!

தமிழகம்

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து 14 பேர் பலி!

அத்திப்பள்ளியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றுக்கு 3 லாரிகளில் பட்டாசுகள் வந்தன. அப்பட்டாசுகளை கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்களும், கடையில் இருந்தவா்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாயின.

இந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தமிழக, கா்நாடக மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

More in தமிழகம்

To Top