Connect with us

Raj News Tamil

ராட்சத கிரேன் எந்திரம் விழுந்து 15 தொழிலாளர்கள் பலி!

இந்தியா

ராட்சத கிரேன் எந்திரம் விழுந்து 15 தொழிலாளர்கள் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராட்சத கிரேன் எந்திரம் விழுந்து 15 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையின் 3-ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் நடைபெற்று வருகின்றது. மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது கிரேன் எந்திரம் திடீரென விழுந்து விபத்தானது. இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். மேலும், 3 படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top