Connect with us

Raj News Tamil

தந்தை செல்போனை எடுத்துச் சென்றதால் 16 வயது சிறுவன் தற்கொலை

இந்தியா

தந்தை செல்போனை எடுத்துச் சென்றதால் 16 வயது சிறுவன் தற்கொலை

மும்பை: செல்போனை தந்தை எடுத்துச் சென்றதால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் மொபைலில் தொடர்ந்து கேம் விளையாடியுள்ளார்.

நவம்பர் 16ஆம் தேதியன்று அவரது தந்தை செல்போனை எடுத்து சென்று படுக்கைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் சிறுவன் மனமுடைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ​​சிறுவன் சமையலறையில் துப்பட்டாவைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிச்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மல்வாணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top