Connect with us

Raj News Tamil

கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழப்பு!

இந்தியா

கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழப்பு!

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் யமுனா நகர் மற்றும் அம்பாலா ஆகிய மாவட்டங்களில் பஞ்சேடோ கா மஜ்ரா, பூஸ்கர், சரண், மண்டே பேரி ஆகிய கிராமங்களில் கள்ளச் சாராயம் புழங்கி வந்துள்ளது. கடந்த புதன்கிழமை இக்கிராமங்களில் கள்ளச் சாராயம் அருந்திய 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சிலர் குறித்து தகவல் தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

More in இந்தியா

To Top