Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா!

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா!

கொரோனா தொற்று தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் 48 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று தினசரி 200 கடந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஏழாம் தேதி வரை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 16 நபர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 48 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 18 நபர்களும், கோவையில் ஏழு நபர்களும், திருவாரூர் 5 நபர்கள் திருவள்ளூர் மாவட்டங்களில் 4 நபர்களும் என மொத்தமாக தமிழகத்தில் 48 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top