தமிழகம்
2 கிலோ கஞ்சா பறிமுதல்..! திமுக பிரமுகர் கைது…!
திருச்சி அருகே 2-கிலோ கஞ்சாவை கடத்திய திமுக பிரமுகரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 கிலோ கஞ்சா கடத்திய திமுக பிரமுகரை தனிப்படை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தமிழக காவல்துறையினர் ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டத்தின் மூலம், தடைசெய்யப்பட்ட கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக தனிப்படை அமைத்து உடனுக்குடன் கைது செய்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக தொடர்ந்து நடைபெற்று வருவதாக எழுந்த புகாரையடுத்து, துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பாலக்கரை அருகே காரில் 2-கிலோ கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்களை கையும் களவுமாக கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திமுக பிரமுகர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தலை தடுக்க வேண்டிய ஆளும் கட்சியினரே, கஞ்சா கடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login