தமிழகம்
முக்கூடல் ஆற்றில் மூழ்கி 2 பேர் பரிதாப பலி !
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆறு உள்ளது . இதற்கு சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சக உறவினர்களான திவ்யா ,ராகுல் , பரமசிவன்,ஸ்ரீ கணேஷ், உள்பட சுமார் 8 பேர் குளிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீகணேஷ் மீட்கப்பட்டார். ராகுல் , திவ்யா இருவரும் மூழ்கி
மாயமாகினர் .தகவலறிந்து வந்த அம்பை மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது தூரத்தில் திவ்யா மற்றும் ராகுல் சடலமாக மிதந்தனர், இருவரது உடலையும் உறவினர்கள் மற்றும் தீயணைப்பு துரையினர் சேர்நது மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி இறந்த திவ்யாவின் கணவர் பரமசிவன் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.