Connect with us

Raj News Tamil

ஜூஸ் கடையில் தகராறு.. கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்..

தமிழகம்

ஜூஸ் கடையில் தகராறு.. கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்..

பொன்னேரி அருகே, கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே, குளிர்பான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த 4 இளைஞர்கள், ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில், அந்த கடையை உடைத்து, அட்டகாசம் செய்தனர். இதுமட்டுமின்றி, அந்த கடையின் ஓரமாக நின்று கொண்டிருந்த காரையும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரையும், கடுமையாக தாக்கி, ரகளையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அட்டகாசம் செய்த 4 பேரில், இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள் அனைவரும் கஞ்சா பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய மற்ற இரண்டு இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இளைஞர்கள் கஞ்சா போதையில், அட்டகாசம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top