தமிழகம்
சிவகங்கை அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 578 மதுபாட்டில்கள் பறிமுதல் : ஒருவர் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கினிப்பட்டி அருகே விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 578 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் ஒருவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
வள்ளலார் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதகுபட்டியை அடுத்துள்ள கண்டனிப்பட்டி அருகே ராஜீவ் காந்தி நகரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் 578 பாண்டிச்சேரி மதுபாட்டிகள் பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் மதுபாட்டில்களை பதுக்கியதாக சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
விடுமுறை நாளான நேற்று விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் மதுவிலக்கு போலீசார் ஒருவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login