Connect with us

Raj News Tamil

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்.. மயக்க மருந்து கொடுத்து காதலன் செய்த கொடூரம்..

தமிழகம்

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்.. மயக்க மருந்து கொடுத்து காதலன் செய்த கொடூரம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற 21 வயது இளைஞரிடம், இன்ஸ்டாகிராம் மூலம், பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில், காதலாக மாறிய நிலையில், இருவரும், கடந்த 1-ஆம் தேதி அன்று, சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சூர்யா, சிறுமிக்கு தெரியாமல், அவரை மது அருந்த வைத்துள்ளார்.

பின்னர், சிறுமி மயக்கம் அடைந்த நிலையில், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மட்டுமின்றி, இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதேபோல், அந்த 8 பேரும், இரண்டு நாட்களுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு, வீட்டிற்கு சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோருக்கு கூறினார்.

இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த 8 பேரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில், இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 வயது சிறுமியை, அவரது காதலனே தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in தமிழகம்

To Top