Connect with us

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு..! வி.சி.க கொடி இருந்ததால் பரபரப்பு

தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு..! வி.சி.க கொடி இருந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கருப்பு மையை வீசிவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை கதவில் பறக்க விட்டு சென்றதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு விசவனூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். பெரும்பாலும் இவர் டெல்லியில் உள்ள வீட்டில் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரான விசவனூருக்கு நேற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கேட்டில் மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். ஆனால் அது வெடிக்காத நிலையில் வீட்டின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து விட்டு மேலும் கருப்பு மையையும் சுவற்றில் வீசியுள்ளனர். மேலும் அங்குள்ள விவேகானந்தர் சிலையின் மீதும் கற்களை வீசியுள்ளனர்.

வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே வி.சி.க., கட்சி கொடியையும் பறக்க விட்டு சென்றுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டாக்டர்.ராமசாமி இதுகுறித்து சாலை கிராமம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி.,சிபி சாய் சௌந்தர்யன், தலைமையில் சாலை கிராமம் போலீஸார், இளையான்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top