Trending
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்..காவல்துறை விசாரணை
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவரை 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் அந்த ஆசிரியை பலத்த காயமடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கியால் சுட்ட அந்த மாணவனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு அறைக்குள் நடந்த வாக்குவாதத்தையடுத்து, மாணவன் ஆசிரியையை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login